எச்டிஎப்சி 0.5% வட்டி குறைப்பு!
மும்பை: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு அரை சதவீதம் (0.5) வட்டியைக் குறைத்துள்ளது.
இந்தப் புதிய விகிதப்படி இனி முதன்மை கடன் வழங்களுக்கான வட்டி விகிதம் 14 சதவிகிதமாக இருக்கும். ஏற்கெனவே கடந்த டிசம்பரில் அரை சதவிகிதம் குறைத்துள்ளது இந்த வங்கி.
வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர் அனைவருக்கும் இந்த புதிய வட்டிவிகிதம் பொருந்தும் என அறிவித்துள்ளது இந்த வங்கி.
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே. இதுவரை 500 புள்ளிகள் வரை சிஆர்ஆர் மற்றும் வங்கி வட்டியைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் வங்கிகளோ முதன்மை கடன் வழங்கல் வட்டியில் 1.5 சதவிதம் முதல் 2 சதவிகிதம் வரை மட்டுமே குறைத்துள்ளன.
ஆனால் இது போதாது என்றும் மேலும் 3 சதவிகிதம் வரை வட்டிக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.