பொருளாதாரம் சரியாகிவிடும்!-ஒபாமா நம்பிக்கை
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கித் துறையை சீரமைக்கு தாம் அறிவித்த ஒரு ட்ரில்லியன் டாலர் உதவித் திட்டத்துக்கு பங்குச் சந்தையில் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், விரைவிலேயே அனைத்து வங்கிகளும் சீரான செயல்பாட்டுக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'இந்த அரசின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு நல்ல பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. இதுவே மிகச் சிறந்த செய்தியாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் நமது பயணத்தில் நீண்ட தூரம் பாக்கியுள்ளது. நாட்டின் வங்கிகள் வசம் உள்ள சொத்துக்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் பல பில்லியன் டாலர் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன் வழங்கலில் இயல்பு நிலை திரும்பும்.
ஆனால் முழு மாற்றம் என்பது ஒரே நாளில் வந்துவிடாது. இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும். ஆனால், விரைவில் எல்லாம் சீர்ப்படும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது, என்றார் ஒபாமா.