'சத்யம் ஏலம் ஒரே மர்மம்!'- ஸ்பைஸ் பரபரப்பு
டெல்லி: சத்யம் நிறுவனப் பங்குகளை விற்பதில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம்.
இதனால் சத்யம் பங்குகள் ஏலத்திலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக ஸ்பைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சத்யம் சேர்மன் பிகே மோடி கூறுகையில், 'சத்யம் நிறுவனத்துக்கு முதலில் ஒரு ஏலதாரர் பட்டியல் தயார் செய்தது சத்யம் இயக்குநர் குழு. இப்போது மீண்டும் ஒரு பட்டியலைத் தயாரிப்பதாகக் கூறியுள்ளது. அப்படியெனில் முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏலதாரர்கள் யார் யார்...? ஒரே மர்மமாக உள்ளது.
இதையெல்லாம் பார்த்தால், சத்யம் பங்குகளை வாங்கலாமா வேண்டாமா என்றே குழப்பமாக உள்ளது.
இதனால் விரைவில் எங்கள் இயக்குநர் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப் கோகிறோம்', என்றார் மோடி.
சத்யம் நிறுவனத்துக்குள்ள கடன்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப் போகிரார்களாம்.
லார்சன் அண்ட் டூப்ரோ, டெக் மஹிந்திரா, ஐகேட்ஸ் போன்ற நிறுவனங்களும் சத்யம் பங்குகளை வாங்க போட்டியிடுகின்றன. இந்த ஏலத்தில் கலந்து கொள்வது எந்தெந்த நிறுவனங்கள் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் ஸ்பைஸ் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications