80 வயது கணவருடன் இணைந்த 23 வயது மனைவி!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே தனது 80 வயது கணவருடன் தான் வாழ தயாராக இருப்பதாக 23 வயது பெண் கூறியதை அடுத்து, அவர்களை போலீஸார் சேர்த்து வைத்து, திருமணத்தையும் பதிவு செய்ய உதவினர்.

சிவகங்கை மாவட்டம், சாளூரைச் சேர்ந்தவர் இளநீர் வியாபாரி கருப்பையா (80). இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.

வயதான காலத்தில் தனிமையில் வாடி வந்த கருப்பையா, உதவிக்காக வேண்டி, மேலூர் அருகே உள்ள கீழையூரில் வசிக்கும் பாண்டிச்செல்வி என்ற 23 வயதுப் பெண்ணை, 15 பவுன் நகைகளைப் போட்டுக் கொடுத்து சில நாட்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் கருப்பையாவின் பிள்ளைகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வயதில் இப்படி ஒரு கல்யாணம் தேவையா என்று கூறிய அவர்கள், ஊரைக் கூட்டி முதியவரையும், அவரது இளம் மனைவியையும் பிரித்து விட்டனர்.

இதனால் மன வருத்தம் அடைந்தார் கருப்பையா. பின்னர் பாண்டிச்செல்விக்கு தான் போட்ட நகைகளை திரும்ப வாங்கித் தருமாறு போலீஸை அணுகினார்.

மேலூர் போலீஸார் நடந்ததைக் கேட்டு கருப்பையா, பாண்டிச் செல்வி இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, நகைகளை திருப்பித் தர முடியாது. எனது கணவராகி விட்டார் கருப்பையா. எனவே அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் இருவரையும் சேர்த்து வைத்தனர். மேலும்,, அவர்களது திருமணமும், மேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+