இலங்கை அகதிகள் காவல் நிலைய முற்றுகை
பழனி: பழனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இலங்கை அகதிகள் திடீர் போராட்டம் நடத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், புளியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் ராஜசேகரன் என்பவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், அகதிகள் முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்கு காரணமான காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்து டேப் உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்று கார் உரிமையாளர் தனபால் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்குமாறு 100க்கும் மேற்பட்ட அகதிகள் கீரனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் இழிவாக திட்டியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இனால் பெண்களை இழிவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழனி - தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பழனி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.