அதிகாரிகள் இடைநீக்கம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டது ஏன் என விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் போலீஸ் மற்றும் வக்கீல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நீதிபதிகள் உட்பட பல வக்கீல்கள் படுகாயமடைந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் படி தமிழக அரசு இரண்டு போலீசாரை சஸ்பென்ட் செய்தது.
இதை எதிர்த்து சஸ்பென்ட் செய்யப்பட்ட சென்னை கூடுதல் கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன், கோவை டிஐஜி ராமசுப்ரமணி ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை தவிர்த்து போலீசாரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்திய சில சட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 6ம் தேதி நடக்கிறது.












Click it and Unblock the Notifications