தேர்தல்-நானும் இருக்கேன்..நினைவூட்டும் டி.ஆர்.
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் லட்சிய திமுக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் விவாதிக்க நாளை லட்சிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அக் கட்சியின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, மாநில சிறு சேமிப்புத்துறையின் துணைத் தலைவராக பதவி வகித்துக்கொண்டிருந்த நான், அந்த பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்து விட்டு போராடத் தொடங்கினேன். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்தேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அரசுத் தரப்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலும், டெல்லியில் நடந்த கூட்டம் என்றாலும் அதிலும் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வந்தேன். இதைத் தவிர பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் நடத்திய போராட்டங்களிலும், உண்ணாவிரதங்களிலும் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வந்தேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஓராண்டு காலமாகவே லட்சிய திமுக லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன.
இந் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், லட்சிய திமுக எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் லட்சிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு லட்சிய திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் ஆளாகப் போய் அதிமுக கூட்டணியில் தானாகவே போய்ச் சேர்ந்தார் ராஜேந்தர். தனது கட்சிக்கு 4 இடம் கேட்ட அவருக்கு ஒரு சீட் கூட தர முடியாது என்று ஜெயலலிதா கூறிவிட்டார். இதையடுத்து இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சீட்டே தராவிட்டாலும் பரவாயில்லை என்று திமுக கூட்டணிக்கு தாவினார் டி.ஆர்.
ஆனால், திமுக கூட்டணியிலுல் கண்டுகொள்ளப்படாததால் அதை விட்டு விலகுவதாக அவர் அறிவிக்க மாநில சிறு சேமிப்புத்துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியின் மூலம் ஒரு வெள்ளை நிற அரசு அம்பாசிடர் கார் தவிர வேறு எதுவும் டி.ஆருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications