நாய் துரத்தி 4வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் பலி
சென்னை: சென்னையில், நாய் துரத்தியதால் பயந்து போன சிறுவன், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்டிருந்த விமானப் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பில், நான்காவது பிளாக்கில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மனைவி அஞ்சனா. இவர்களுக்கு ஆசிஷ் அரவிந்த் (11) என்ற மகனும், ஷிவானி (4) என்ற மகளும் உள்ளனர்.
ஆசிஷ் அரவிந்த், கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், தேர்ச்சி பெற்ற ஆசிஷ் அரவிந்த், அடுத்த பிளாக்கில் வசிக்கும் தனது மாமா சங்கர்ராவ் வீட்டிற்கு சென்று இனிப்பு வழங்கினான்.
அதன் பின்னர் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்த தனது நண்பனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.
அதே பிளாக்கில், விமான பணிப்பெண்களாக வேலை பார்க்கும் நமீதா நாயக் (25), அவரின் சகோதரி சமீதா நாயக் (22) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் டாபர்மேன் ரக நாயை வளர்த்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் நாயை மாடியில் உலவ விடுவார்களாம்.
நேற்று முன்தினம் நமீதா நாயக் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த சமீதா நாயக் வழக்கம்போல் இரவில் நாயை மாடியில் விட்டார்.
இந்த சமயத்தில்தான் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆசிஷ் அரவிந்த்தை நாய் துரத்தியது. பயந்து போன சிறுவன் வேகமாக ஓடியுள்ளான். அப்போது நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.
உடனடியாக அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்ட விமான பணிப் பெண் சமீதா நாயக் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் ஆசிஷ் அரவிந்த் தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தான். அதற்காக பதிவும் செய்து வைத்திருந்தான். இதையடுத்து அவனது கண்கள் தானமாக எடுக்கப்பட்டன.
இச்சம்பவம் ஏர்லைன்ஸ் குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications