கல்லணை பாலத்தில் விரிசல்-வாகனங்களுக்கு தடை
தஞ்சாவூர்: கல்லணை பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதன் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே அணைக்கரை என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது கல்லணை. இந்த கல்லணை ஆற்று பாலத்தில் சமீபத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டடுள்ளது.
இந்த பாலத்தில் அதிக பாரம் கொண்ட மணல் லாரிகள் தினந்தோறும் செல்வதனாலும், பஸ் போக்குவரத்து காரணமாகவும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி செங்குட்டுவன், நெடுஞ்சாலைத் துறையினருடன் சென்று பாலத்தின் உறுதி தன்மை குறித்தும், விரிசல் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் - சென்னை இடையேயான போக்குவரத்துக்கு இந்த பாலத்தை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு இப்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications