ஜி-20: லண்டனில் மன்மோகன்; ஒபாமாவுடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

ஒபாமா அதிபரான பின்னர் அவரை மன்மோகன் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக இன்று பிரமதர் லண்டன் புறப்பட்டார்.
2 மாதத்துக்கு முன் இருதய அறுவை சிகிச்சை கொண்ட பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
லண்டன் புறப்படும் முன் நிருபர்களிடம் பேசிய அவர்,
அமெரிக்க அதிபர் ஒபாமாவை 2ம் தேதி சந்தித்துப் பேசுகிறேன்.
இரு நாட்டு உறவுகள், சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவருடன் விவாதிப்பேன்.
தீவிரவாதம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் பிரச்சினைகள், சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து அவருடன் பேசுவேன்.
ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் 2வது முறையாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications