கேரளாவில் புலிகள் ஊடுருவல்!-டிஐஜி மறுப்பு!!
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்துக்கு படகில் விடுதலைப் புலிகள் வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, ஆலப்புழை - கொச்சி இடையே கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பள்ளிப்புரம் கடற்கரை பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பின் சீருடை அணிந்து நேற்று மதியம் 15 பேர் வந்துள்ளனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆலப்புழை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த செய்தி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடற்படை தளமான கொச்சியை விடுதலைப்புலிகள் தாக்க கூடும் என்று மத்திய உளவுத் துறை இலாகாவும் கேரள போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஆலப்புழையில் இருந்து கொச்சி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுப்பப்பட்டன. போலீசாருடன் இணைந்து கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இது தவிர, கேரள கடற்கரை முழுவதும் கடற்படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன.
இதற்கிடையே அருகிலிருந்த செர்தாலா பகுதியில் சிலர் சென்று உடைகள் தருமாறு கேட்டதாகவும், அவர்கள் தமிழில் சரளமாக பேசி கொண்டதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், கேரள கடற்கரையில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கான சாத்தியம் உள்ள அனைத்து பாதைகளுமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
டிஐஜி மறுப்பு...
இது குறித்து போலீஸ் டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் இதை மறத்துள்ளார். அவர் கூறுகையில், அந்த படகையும் அதில் வந்தவர்களையும் பிடித்து விசாரித்துவிட்டோம். அவர்கள் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் தான். கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு நீண்ட நாள் கழித்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் படகு என்ஜினை மூடும் துணி, மீன் வலை மற்றும் மண்ணெண்ணை கேன் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். என்ஜினை மூடும் துணியை போர்த்தி இருந்தவரை பார்த்து மக்கள் விடுதலை புலி என நினைத்து விட்டனர். நான் அவர்களுக்கு வீட்டு சென்று இதை உறுதி செய்து கொண்டேன் என்றார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications