For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியில் நேற்று 112 தமிழர்கள் படுகொலை

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: இலங்கையின் வன்னியில் ராணுவத்தின் தாக்குதலில் நேற்று 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனற். இவர்களில் 21 பேர் சிறார்கள். 27 சிறார்கள் உள்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி திங்கட்கிழமை காலை முதல் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் 21 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.

கூடாரங்களில் வசிக்கும் மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

28 வயதான சந்திரிகா எனும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொத்துக்குண்டு தாக்கியதில் படுகாயமடைந்ததால் அவரின் சிசு அரைகுறையாக வெளியில் வந்தது.

வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளில்தான் அதிகளவிலான மக்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X