எஸ்எஸ்எல்சி ஆள்மாறாட்டம்-8 மாணவர்கள் கைது
கடலூர்: எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு விதிமுறைகளை மீறிய 3 மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே திருப்பாலிபுலியூர் புனித வளானார் மேல்நிலைப்பள்ளியில் பிஎன் பாளையத்தை சேர்ந்த முருகதாஸ், புதுச்சேரி உய்யவாய்க்கால்லை சேர்ந்த குமரன், புதுச்சேரியை சேர்ந்த புஷ்பலிங்கம் ஆகிய மூவருக்கு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனே ஆங்கில தேர்வை பல முறையும் எழுதியும் தோல்வி கண்ட இவர்கள் இம்முறை எப்படியும் பாஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான முறையை கையாண்டுள்ளனர்.
ஆங்கில தேர்வை தங்களுக்கு பதிலாக எழுத கடலூரை அடுத்த சிங்கிரிகுடி சுப்பையா மகன் தணிகாசலம்(17), அய்யனார் மகன் ஆனந்த்பாபு (16), தெய்வசிகாமணி மகன் சந்திரன்(16) ஆகிய மூன்று பேரை தேர்வு எழுத செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அவர்களுக்கு பதிலாக நேற்று ஆங்கில தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது அந்த தேர்வு கூடத்துக்கு கடலூர் நகராட்சி ஆசிரியர் ஒருவர் கண்காணிப்பாளராக வர இவர்கள் மூவரும் தங்களது பள்ளியில் பிளஸ் 1 படிப்பவர்கள் என்பதை அறிந்த அந்த ஆசிரியர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.
ஆசிரியர்களின் விசாரணையில் அந்த மாணவர்கள் தங்களது ஆள்மாறாட்டத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தணிகாசலம், சந்திரன், ஆனந்த்பாபு, முருகதாஸ், புஷ்பலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரத்தில் 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சாரத்குமார், மோகன் ராஜ், அஜித் குமார் ஆகிய மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications