For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் என்டிபிசியின் 4000 மெகாவாட் மின் திட்டம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

NTPC power
சென்னை: பொதுத்துறை மின் சக்தி நிறுவனமான என்டிபிசியும் ஐஎல்&எப்எஸ்ஸின் துணை நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் 4000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கின்றன.

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு என் வீராசாமி இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக மின்சாரா வாரியம் ஆண்டுக்கு ரூ.6000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்திப்பதாகவும், இந்த நஷ்டம் அடுத்த இரு ஆண்டுகளில் சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பக்கத்து மாநிலங்களுக்கும் விற்கும் அளவுக்கு நிலைமை முன்னேறிவிடும், அதனால் நஷ்டமும் சரியாகிவிடும் என்று அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.

தமிழக மின்சாரத் துறையை இரு வேறு நிறுவனங்களாக மாற்றி நிர்வகிக்கும் திட்டம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இவற்றில் ஒன்று மின் உற்பத்தியையையும் மற்றொன்று விநியோகத்தையும் கவனிக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறிய ஆற்காடு வீராசாமி, விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கை வெளியாகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X