சென்னை-துபாய்: ஜெட் ஏர்வேஸ் தினசரி விமானம்
சென்னை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சென்னை மற்றும் மும்பையில் இருந்து துபாய்க்கு இரண்டு புதிய தினசரி விமான சேவையை வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் துவக்கவிருக்கிறது.
குவைத், பக்ரைன், மஸ்கட், தோகா, அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை அளித்து வருகிறது ஜெட்.
ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையிலிருந்து இருந்து இரண்டு தினசரி விமானங்களை துபாய்ககு இயக்கி வரும் இந்த நிறுவனம் தற்போது இந்த விமானங்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
சென்னை மற்றும் மும்பையில் இருந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி இரண்டு போயிங் 737-800 விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து தினமும் மதியம் 12.45க்கு புறப்பட்டு, 3.30 மணிக்கு துபாய் சென்றடையும். வரும் மே 31ம் தேதி வரை பயணிகளுக்கு கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications