For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16ல் பொதுக் கூட்டம்-பிரச்சாரம் தொடங்கும் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வரும் 16ம் தேதி செனனை தீவுத் திடலில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடங்குகிறார்.

நாளை அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில் தொடங்குகிறது. ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடைபெறும் இந்த நேர்காணல் 2 நாட்கள் நடைபெறுகிறது.

நேர்காணல் முடிவடைந்த பின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுகிறார். இதையடுத்து 16ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

சென்னையில் பிரசாரம் தொடங்கும் ஜெயலலிதா பிரமாண்ட பொதுக் கூட்டத்துடன் அதை ஆரம்பிக்கிறார். தீவுத்திடலில் இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா தவிர பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X