ஸ்டாலினை சந்தித்த ஐக்கிய கம்யூ. நிர்வாகிகள் நீக்கம்
கரூர்: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தோக மலையில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கொள்ளை ரீதியாக அதிமுகவை ஆதரிக்க மதுரையில் நடைபெற்ற மாநில குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஈரோடு சண்முகம், நாமக்கல் கணேசன், வேலூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, திமுக பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. இதனால் மேற்கண்ட 3 பேரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.