For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் வருணை கொடுமைப்படுத்துகிறார்கள்-வெங்கையா நாயுடு

By Staff
Google Oneindia Tamil News

எடவா: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளம் தலைவர் வருண் காந்தி எடவா சிறையில் கொடுமை படுத்தப்படுவதாக அக்கட்சியின் துணைத் லைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக வருண் காந்தி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் அவரை கொல்ல நிழல் உலக தாதா சோட்டா ஷகீல் சதி திட்டம் தீட்டியது உளவுதுறையால் கண்டுபிடிக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தர பிரதேச அரசு அவரை பிலிபித் சிறையில் இருந்து எடாவா சிறைக்கு மாற்றியது.

இந்நிலையில் எடாவா சிறையில் வருணை சந்தித்த பின் வெங்கையா நாயுடு கூறுகையில்,

பிலிபித் சிறையில் இருந்து வருண் அனுமதி இல்லாமல் எடாவா சிறைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவரை மிக சிறிய அறையில் போட்டு அடைத்துள்ளனர். அங்கு அவரை யாரையும் பார்க்க முடியாமல் செய்துள்ளனர்.

அவர் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளார். அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வருண் பேசிய சிடியில் இருப்பது அவரது குரலே கிடையாது. இதில் சதி நடந்துள்ளது. அவர் தவறாக எதுவும் பேசவில்லை. அவரை கொல்ல சதி நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார் வெங்கையா நாயுடு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X