இன்று முதல் அதிமுக நேர்காணல்-'நேரம்' நல்லாயிருந்தால் சீட்!

தேர்தலில் போட்டியிட 3,400க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு செய்துள்ளனர். இவர்களிடம் விண்ணப்பத்துடன் ஜாதகமும் வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதகங்களை அலசி ஆராய ஒரு ஜோதிடர் குழுவும் அமைக்கப்பட்டு அவர்கள் வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்து ஜெயலலிதாவிடம் தந்துவிட்டனர்.
அதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார் ஜெயலலிதா. இருப்பினும் விண்ணப்பி்த்தவர்களிடம் நேர்காணலும் நடத்துகிறார் ஜெயலலிதா.
இன்று மாலை தான் நேர் காணலை ஜெயலலிதா தொடங்குகிறார்.
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
நேர்காணல் முடிவடைந்த பின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வரும் திங்கள்கிழமை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதையடுத்து 16ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
பிரசாரத்தை தொடங்கிய பின் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய ஜெயலலிதா ஹெலிகாப்டரை பயன்படுத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications