ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு பிடிவாரண்ட்!
மதுரை: நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவுக்கு உயர் நீதி மன்ற மதுரை ளை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அன்னமல்கியா. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர்.
சமீபத்தில் பிஎட் ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தார்.
ஆனால், அன்னமல்கியாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூறி அவருக்கு ராணுவ வீரரின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் வேலை தர முடியாது என ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது.
இதை எதிர்த்து அன்னமல்கியா உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் அன்னமல்கியாவுக்கு வேலை தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திர்கு உத்தரவிட்டது. ஆனால் வேலை தர தேர்வு வாரியம் மறுத்து விட்டது.
இனால் அன்னமல்கியா தேர்வு வாரிய தலைவர் ராமையா மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவை நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் ராமையா ஆஜராகவில்லை. இதனால் ஜாமீனில் வெளியே முடியாத பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications