தென்காசி-சென்னை ரயிலில் மதிமுக ஓட்டு வேட்டை
தென்காசி: தென்காசி - சென்னை சிறப்பு கோடை ரயிலில் நேற்று மதிமுகவினர் பயணிகளை சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தினர்.
தென்காசியில் மதிமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினர். கோடை விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டையில் இருந்து ஞாயிறு தோறும் சென்னைக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதன் முதலாக நேற்று மாலை 2.40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து கோடை சிறப்பு ரயில் எண் 610 சென்னைக்கு புறப்பட்டது.
சிறப்பு ரயில் தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும் நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளி்த்தனர்.
ரயிலில் மதிமுக கொடி...
ரயில் இன்ஜின் முன்பகுதியில் வாழை மரங்கள், மாலைகள் கட்டப்பட்டு, தோரணம் அமைக்கப்பட்டது. மதிமுக கொடியையும் ரயிலில் அக்கட்சியினர் கட்டினர். ரயில்வே பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரயில்வே பயணிகளிடம் மதிமுக தொண்டர்கள் ஓட்டு வேட்டையாடினர்.
தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பம்பரம் சின்னத்திற்கு ஓட்டு போடும்படி ரயில்வே பயணிகளிடம் கூறினர். மேலும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து ஓட்டு போடும்படி பயணிகளிடம் பிரச்சாரம் செய்தனர்.
டில்லியில் நடந்த மதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வைகோ ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வை சந்தித்து கோடை கால சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் அதிகளவில் விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கோடை கால சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இயக்கப்படுகிறது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications