சென்னை படகு விபத்து-3 பேர் பலி, 13 பேரை காணவில்லை
சென்னை: சென்னை அருகே 20 பேர்களுடன் கடலில் உல்லாச சுற்றுலா சென்ற படகு மூழ்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தப்பி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
சென்னை எண்ணூரில் நேற்று நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து குவிந்தார்கள். கோயில் விழாவுக்கு வரும் மக்கள் கடலில் படகு சவாரி போவது வழக்கம்.
நேற்று திருவிழாவுக்கு வந்தவர்களில் 20 பேர்களை சுமந்து மதியம் சுமார் 2.30 மணிக்கு படகு ஒன்று எண்ணூருக்கு அருகே கடலுக்குள் சென்றது. அந்த படகில் 10 பேருக்கு மேல் செல்வது கடினம். ஆனால், 20 பேர் சென்றதை அடுத்து படகு பாரம் தாங்க முடியாமல் கடலில் தத்தளித்தது.
இந்நிலையில் அங்கு திடீரென ராட்சத அலைகள் எழுந்தது. அதில் சிக்கிய படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 20 பேரும் மூழ்கினார்கள்.
இதில் பயணம் செய்த இமயவர்மன், ராஜசேகர், மணிமாறன், முனியசாமி ஆகிய 4 பேரும் நீந்தி கரைக்கு வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் ஆசைத்தம்பி, நாகராஜ், பிளஸ் 1 மாணவர் வினோத்குமார் உள்ளிட்ட மூன்று பேரின் உடல்களை மீட்டனர். மற்ற 13 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. நேற்று இரவு முழுவதும் போலீசார் தேடிய போதும் இருட்டு அவர்களுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி தொடர்கிறது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள்












Click it and Unblock the Notifications