அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை
சென்னை: தண்ணீர் பந்தல் அமைத்து அதன்மூலம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகளுக்கு தண்ணீர் பந்தல்கள் அமைப்பதற்கு விரைவில் தடை கொண்டுவர தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறைகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதை தவிர்த்து தேர்த்ல ஆணையம் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தேர்தலை நியாயமான முறையில் நடத்த முழு முயற்சி செய்து வருகிறது.
வீட்டு சுவர்களில் உரிமையாளர்கள் உத்தரவின்றி விளம்பரங்கள் எழுத கூடாது என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படங்கள் இருக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோடை காலம் துவங்கிவிட்டதை அடுத்து, வெயில் மக்களை வாட்டி வருகிறது. நேற்று முதல் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர், நீர்மோர் மற்றும் ஜுஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து பல கட்சிகளும் தண்ணீர் பந்தல் வைத்து வாக்காளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் குடிக்க நீர்மோர் கூட கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இது வாக்காளர்களை கவரும் யுக்திகளில் ஒன்றாக கருதப்படுவதால், தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க தடை விதிக்க, தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தண்ணீர் பந்தல் வைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கட்சிகள், கட்சி கொடி, தலைவர்கள் படம், கட்சி சின்னம் என எந்த தோரணமும் இல்லாலம் தண்ணீர் பந்தல் வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதற்கான உத்தரவுகளை தேர்தல் ஆணையம் விரைவில் பிறப்பிக்க இருப்பதாக தெரிகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications