அதிமுக, தேமுதிக சின்னம் அழிப்பு-ஆணையம் அதிரடி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் போரில் அழிக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நகரங்களில் உள்ள சுவர்களில் தேர்தல் சின்னங்களை வரையக்கூடாது என்றும், கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டி போர்டுகள் ஆகியவற்ற வைக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த தேர்தல் விதிமுறைகளை மீறி யாராவது சின்னம் வரைந்தாலோ அல்லது பேனர்கள் வைத்தாலோ அவற்றை அந்த அரசியல் கட்சியின் செலவிலே அகற்றப்படும் என் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் தனியார் மற்றும் அரசு சுவர்களில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களது சின்னங்களை வரைந்து பிரச்சாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து இந்த புகார் உண்மை என்பதை தெரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் அதை நீக்க உத்தரவிட்டது.
இதையடுத்து திருச்செங்கோடு கோட்ட அலுவலகர் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரசு ஊழியர்கள் இந்த சின்னங்களை அழித்தனர். மேலும் பள்ளிபாளையம் பிரிவு அருகே புதிதாக திறக்கப்பட்ட தேமுதிக தேர்தல் அலுவலகத்துக்கு முன்பு இருந்த விஜயகாந்தின் பேனர்கள் நான்கையும் அகற்றினர்.












Click it and Unblock the Notifications