For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொட்டை..பச்சை குத்தி 'கஜினி ஸ்டைலில்' கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உடம்பில் பச்சை குத்தி கொண்டு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர் ஒருவரை கொலை செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையை நிறைவேற்றிய அவர்கள் காளி கோயிலுக்கு மொட்டை போட்டு சபதம் நிறைவேற்றியதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை யானைகவுனி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் ( 26). விடுதலைச் சிறுத்தை கட்சி உறுப்பினரான இவரை கடந்த 5ம் தேதி பட்டப்பகலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.

உடலில் வெட்டு விழாத பாகங்களே என சொல்லும் அளவுக்கு அவரது கை, கால், முகம், கழுத்து, மார்பு, என 26 இடங்களில் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். போலீசார் விசாரணையில் சதீசின் அண்ணன் தலித் பாலு 6 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும் பாலுவை க் கொன்றவர் என நினைத்து பாபு என்பவரை சதீசும் அவரது கூட்டாளிகளும் கொலை செய்துள்ளனர்.

இதற்கு தற்போது பழிவாங்கும் நடவடிக்கையாக சதீஷ் கொல்லப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலை சேர்ந்த மீதி ஆறு பேரை தேடி வருகின்றனர்.

இவர்களில் பாபுவின் தம்பி தண்டபாணி, அவரது நண்பர்கள் சேட்டு (42), ராஜ (27), குமார் (38) ஆகியோர் சதீசை கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள காளி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு கொண்டதாக தெரிவித்தனர்.

போலீசாரிடம் பாபு கூறுகையில், எனது அண்ணனை கொன்றுவிட்டு, சதீஷ் கூட்டாளிகள் மொட்டை போட்டு வெற்றியை கொண்டாடினர். அதற்கு பழிவாங்கவே தாங்கள் கொலை செய்தோம்.

மேலும், எனது அண்ணன் கொலை செய்யப்பட்ட தேதி மறந்துவிடக்கூடாது என்பதால் நானும், எனது நண்பர்களும் அவனது இறந்தநாளான 10.08.2006 என்பதை நெஞ்சில் பச்சை குத்தி வைத்துள்ளோம்.

பாபு 26 இடங்களில் வெட்டப்பட்டு இறந்தான். அதனால் தான் சதீசையும் உடல் முழுக்க 26 இடங்களில் வெட்டி கொன்று பழிதீர்த்தோம் என்று கூறியுள்ளார்.

இந்த கும்பலின் தலைவனாக பாபுவின் உயிர் நண்பன் ராஜூ கொடுத்த வாக்குமூலத்தில்,

எனது கண் முன்னே பாபுவை சதீசின் ஆட்கள் துடிக்க, துடிக்க வெட்டி கொன்றார்கள். அந்தக் காட்சி என் நெஞ்சை விட்டு அகலவில்லை. பாபுவின் மனைவி ஸ்டெல்லா வெள்ளை புடவையோடு விதவை கோலத்தில் இருந்த காட்சியும் என் கண்ணுக்குள் நின்றது.

இதனால் சதீசை போட்டுத்தள்ள முடிவு செய்தோம். சதீஷ் எங்களிடம் இருந்து தப்பிக்க திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தில் அவரது மாமியார் வீட்டில் போய் மறைந்து வாழ்ந்தார். அவர் சென்னைக்கு வரும்போது தீர்த்துக் கட்டலாம் எனகாத்திருந்தோம்.

இந்த நிலையில் சதீஷ் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை பெரியமேட்டில் உள்ள கண்ணப்பர் திடலுக்கு வந்து கிரிக்கெட் விளையாடி வருவது எங்களுக்குத் தெரிய வந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பே அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால், 2 ஞாயிற்றுக் கிழமைகள் அவர் விளையாட வரவில்லை. நாங்கள் காத்திருந்து ஏமாந்து போனோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உறுதியாக கிரிக்கெட் விளையாட வருவார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் இருந்து கண்ணப்பர் திடலில் அரிவாள், கத்தியுடன் காத்திருந்தோம். 6 மணிக்கு சதீஷ் வந்தார். கொஞ்சம்கூட தாமதிக்காமல் அவரை வெட்டி சாய்த்து எங்கள் சபதத்தை நிறைவேற்றினோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X