மேற்கு ராஜஸ்தானில் நிலநடுக்கம்- 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.
மேற்கு ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த ஜெய்சால்மர், பார்மர் பகுதிகளில் இன்று காலை 7.17 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜெய்சால்மருக்கு மேற்கே 50 கிமீ., தொலைவில் 33 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சுமார் 15 முதல் 20 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலியானார்கள்.
நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன மக்கள் வீட்டிலிருந்து அலறியடித்து வெளியில் ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்களிலும், வீட்டு சுவர்களிலும் கீறல்கள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications