சிறையில் கைதிகளிடம் 14 செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி காலாபட்டில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு சுமார் 245 கைதிகள் உள்ளனர். கடந்த சில காலமாக சிறையில் செல்போன்கள், பேட்டரி போன்ற பொருட்களை கைதிகள் சிறைக் காவலர்களுக்கு தெரியாமல் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நடராஜன் உத்தரவின் பேரில் காலாபட்டு சிறை காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர்.
அப்போது சமையல் அறையின் அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications