18ம் தேதி பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெ.
சென்னை: வேட்பாளர்களை அறிவித்து விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஏப்ரல் 18ம் தேதி முதல் தனது சூறாவளி பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
வரும் 18ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் அவர் மே 10ம் தேதி வரை தமிழகம் முழுவதுமான தனது தீவிரப் பிரசாரத்தை தொடர்கிறார்.
அவரது பிரச்சார டூர் விவரம்:
18ம் தேதி நெல்லை மற்றும் நாகர்கோவில், 20ம் தேதி தேனி, திண்டுக்கல், 22ம் தேதி பரமக்குடி, சிவகங்கை, 23ம் தேதி சிவகாசி, மதுரை, 25ம் தேதி ஈரோடு, சேலம், 26ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, 27ம் தேதி திருப்பூர், பொள்ளாச்சி, 29ம் தேதி நாமக்கல், முசிறி,
30ம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர்,
மே 2ம் தேதி கரூர், திருச்சிராப்பள்ளி, மே 3ம் தேதி மேட்டுப்பாளையம், கோவை, மே 4ம் தேதி வேலூர், ஆரணி, மே 5ம் தேதி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,
மே 6ம் தேதி விழுப்புரம், கடலூர், மே 7ம் தேதி புதுச்சேரி, சிதம்பரம், மே 8ம் தேதி காஞ்சிபுரம், அரக்கோணம்,
மே 9ம் தேதி பல்லாவரம், ஆவடி, மே 10ம் தேதி தியாகராய நகர் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications