For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதி கணக்கெடுப்பு: பாமக கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவி்ட்டது.

இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கொடுத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை சரியாக அடையாளம் காண வேண்டும் என பாமக சார்பில் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன், நீதிபதி ப.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பாமக சார்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்மா குமார் வாதாடுகையில்,

கடந்த 10 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியலில் திருத்தப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் பல முறை எடுத்து கூறியுள்ளோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சரியான ஒதுக்கீடுகள் கிடைக்க சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இந்தியாவில் சாதி என்பது சமூக அடிப்படையி்ல் மட்டும் பிரிக்கப்படவில்லை. சமுதாயத்தில் அரசியல் மட்டும் வேலை வாய்ப்பிலும் சாதி பிரிவு உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறுகையில்,

இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடவோ அல்லது வழிகாட்டவோ முடியாது. புதிய அரசு அமையும் வரை பொறுத்திருங்கள். நீங்களும் அதில் இடம்பெறலாம். அப்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கை சொல்லுங்கள் என்றனர.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X