காஞ்சி ராஜேந்திரன் தென் சென்னை அதிமுக வேட்பாளர்

அதிமுகவின் சுறுசுறுப்பான தளபதிகளில் ஒருவர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். கட்சித் தலைமை அறிவிக்கும் ஒவ்வொரு போராட்டத்தையும் படு பிரமாண்டமாக நடத்தி தலைமையின் மனம் கவர்ந்தவர் ராஜேந்திரன்.
உள்ளூரில் ஏதாவது பிரச்சினை என்றால் ஓடி வந்து முதலில் நிற்பார்.
இவர் சார்ந்த சிட்லபாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தொகுதி இதுநாள் வரை தென் சென்னை எம்.பி. தொகுதியின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது ஸ்ரீபெரும்புதூருக்குப் போய் விட்டது.
இருப்பினும் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் கட்சி விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் மதிப்புமிக்க தென் சென்னை தொகுதியில் அவரை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
பெரிய பெரிய தலைவர்கள் நின்று வென்ற தொகுதி இது. அதிமுகவில் ராஜேந்திரனை விட பெரிய ஆட்கள் எல்லாம் சீட்டுக்காக காத்திருந்தும் கூட அவரைத் தேடி சீட் வந்துள்ளதால் உற்சாகமடைந்துள்ளார்.
1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை சிட்லபாக்கம் பேரூராட்சி துணைத்தலைவராக இருந்தார். 1987-ம் ஆண்டு சிட்லபாக்கம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ஆனார். 2000-வது ஆண்டு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்தார்.
2001-ம் ஆண்டு மீண்டும் மாவட்ட செயலாளராக இவரை ஜெயலலிதா நியமித்தார். கட்சியில் மேலும் பல பதவிகளை வகித்தவர். இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், பிரவீன்(20), அஸ்வின்(18) என்ற மகன்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications