இரு முறை எம்.எல்.ஏவாக இருந்த செம்மலை லோக்சபா தேர்தலில் முதல் போட்டி
Subscribe to Oneindia Tamil

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செம்மலை 1945ம் ஆண்டு பிறந்தவர். சேலம் எம். ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் செம்பக்கவுண்டர், தாயார் பெயர் சின்னாத்தாள்.
பி.எஸ்.சி. பி.எல், படித்துள்ள 62 வயது செம்மலைக்கு புஷ்பா என்ற மனைவியும், வெற்றிச்செல்வி, மலர்க்கொடி என இரு மகள்களும், எழில்அமுதன், விஜயராகவன் என்று இரு மகன்களும் உள்ளனர்.
வழக்கறிஞரான இவர் 1980, 85, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்.
ஜெயலலிதா அமைச்சர்வையில் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டார்.
சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். தற்போது கழக அமைப்புச் செயலாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications