2 நாள் போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை!

போர் முனையிலும், வட கிழக்கு கடலோரத்தில் 17 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பாதுகாப்பு வளையத்திலும் சிக்கியுள்ள தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதையடுத்து உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் உலக நாடுவதாக நிர்பந்தம் செய்து வரும் நிலையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தத்தை இலங்கை அறிவித்துள்ளது.
இது குறித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் அடுத்த 2 நாட்களுக்கு (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்தி வைக்கும்.
இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியே அனுமதிக்கப்பட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தற்காப்பு தாக்குதல் தவிர மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
முன்னதாக அந் நாட்டு செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறுகையி்ல், நாளையும் செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.
பாதுகாப்பு வளையம் என்று கூறிக் கொண்டு இந்தப் பகுதியியிலும் தினந்தோறும் குண்டுகளை வீசி தமிழர்களை ராணுவம் கொன்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள சண்டே அப்சர்வர் நாளிதழில் இன்று வெளியான செய்தியில்,
பாதுகாப்பு வளையத்தில் சிக்கியுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதித்தால் 48 மணி நேர போர் நிறுத்தத்தக்கு ராணுவம் தயாரக இருப்பதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications