'பஞ்சி ஜம்ப்'-சென்னை மெரைன் என்ஜீனியர் பெங்களூரில் பலி

சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகன் பார்கவ் (23) மரைன் என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் மெரைன் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். இரண்டாவது மகன் சரண் (21) கல்லூரியில் படித்து வருகிறார்.
பார்கவ் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அலாதி பிரியம். அதுவும் 'பஞ்சி ஜம்ப்' விளையாடி பார்க்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 'பஞ்சி ஜம்ப்' எங்கு நடக்கிறது என்பதை தேட துவங்கியுள்ளார். அப்போது அவருக்கு இன்டர்நெட் நண்பர்கள் சிலர் மூலமாக பெங்களூரில் பன்னர்கட்டா பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் 'பஞ்சி ஜம்ப்' நடப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனது நண்பர்கள் 15 பேருடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி இரவு சென்னையி்ல இருந்து பெங்களூர் வந்தார். அவர்கள் பெங்களூர் முருகேசபாளையத்தி்ல் இருக்கும் கிளப் ஒன்றிலிருந்து ரூ. 750க்கு டிக்கெட் வாங்கி கொண்டு பன்னர்கட்டா வந்தனர்.
பஞ்சி ஜம்ப் விளையாட்டில் முதலில் பெல்ட் அணிந்து கொண்டு உயரமான இடத்தில் இருந்து கீழே குதிப்பார்கள். பின்னர் கீழே இருந்து மெல்ல மேலே கிரேன் மூலம் தூக்கப்படுவார்கள்.
200 அடி உயரத்தில் இருந்து கீழே பள்ளத்தில் குதிக்கும் விளையாட்டின் முதல் பாதியை பார்கவ் மற்றும் அவரது நண்பர்கள் வெற்றிகரமாக முடித்தார்கள்.
பின்னர் அடுத்த கட்டமான பள்ளத்தில் இருந்து மேலே செல்லும் விளையாட்டு ஆரம்பமானது. இதற்காக பார்கவ், இடுப்பிலும், கால்களிலும் பாதுகாப்பு பெல்ட்டுகளை கட்டிக்கொண்டு தயாரானார். அவருக்கு இந்த பாதுகாப்பு பெல்டை அங்கு வேலை பார்த்த பிரனேஷ், நாகேந்திரா ஆகியோர் கட்டியுள்ளனர்.
பார்கவ் உற்சாகத்துடன் மேலே ஏறிக் கொண்டிருந்தார். அவர் 60 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இடுப்பு பெல்ட் அறுந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து கீழே விழுந்தார். கீழே விழுபவர்களுக்கு அடிபடாமல் இருக்க வலை பின்னப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
என்றாலும் பார்கவ், அந்த பாதுகாப்பு வலையை தாண்டி போய் விழுந்து விட்டார். பலத்த அடிபட்டு அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனார். ஆனால், அவர் இறந்து வெகு நேரமாகிவிட்டது என டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர்.
நேற்று பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 'பஞ்சி ஜம்ப்' விளையாட அந்த பொழுதுபோக்கு பூங்காவினர் முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், பார்கவுக்கு கட்டப்பட்ட இடுப்பு பெல்ட் பழுதடைந்திருந்ததும் தெரிய வந்தது..
இதையடுத்து கேர் அட்வென்ச்சர் கிளப்பின் நிர்வாகியான சேஷாத்ரி, பஞ்சி ஜம்ப் விளையாட்டின் குழு தலைவரான சச்சின் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!











Click it and Unblock the Notifications