லீலாவதி நினைவு நாளில் மதுரையில் ஜெ. பிரசாரம்
மதுரை: மதுரையில் திமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி நினைவு நாளில் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரமாண்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி இந்தக் கூட்டம் மதுரையில் நடைபெரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்தார்.
நேற்று மதுரையில் நடந்த சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்து முக்கிய அரசியல் சம்பவங்கள் குறித்துப் பேசினோம்.
அப்போது அதிமுகவுக்கான தேர்தல் அறிக்கை முடியும் தருவாயில் உள்ளதாகவும், தேர்தல் பிரசாரத்துக்கான குழுக்களையும் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரசாரம் கடுமையான வெயிலான நேரமாக அமைந்துள்ளதே என நாங்கள் கூறினோம். கஷ்டமாக இருந்தாலும் பிரசாரம் மேற்கொள்வேன் என்றார்.
மதுரையில் மறைந்த லீலாவதியின் நினைவு தினம் ஏப்ரல் 23ம் தேதி வருகிறது. அன்று சிபிஎம் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் கலந்து கொண்டு சிபிஎம் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து பேசுவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications