குஜராத் கலவரம்: மாஜி டிஜிபி நிரபராதி-புலனாய்வு பிரிவு
டெல்லி: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னாள் டிஜிபி பி.சி.பாண்டேவுக்குத் தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவுதெரிவித்துள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் பெரும் மதக் கலவரம் மூண்டது. முஸ்லீம் சமுதாயத்தினர் விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அப்போது அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தார் பாண்டே.
கலவரத்திற்கு அவர் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் பி.சி.பாண்டேவுக்கு கலவரத்தில் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..
குல்பர்க்கில் நடந்த சம்பவத்தின்போது (இந்த வன்முறையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் சங் பரிவார் கும்பலால் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்) பி.சி.பாண்டே மருத்துவமனையில் இருந்தார். கலவரத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். காயமடைந்தவர்களுக்கு அவர் உதவிக் கொண்டிருந்தார்.
பி.சி.பாண்டேவுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தீஸ்தா தலைமையிலானவர்கள் சமர்ப்பித்த புகார்கள் அனைத்தும் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரிஜித் பசாயத், குஜராத் கலவரம் தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் (குல்பர்க், நரோடா பாதியா, சர்தார் புரா உள்பட) உள்பட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க தேவையான அளவு தனி கோர்ட்டுகளை குஜராத் அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளை குஜராத்திலிருந்து வெளிமாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கை குறித்து குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
உடலுறவில் மனைவி கழுத்தை "இறுக்கிய" கணவர்.. பரிதாபமாக பறிபோன உயிர்.. அதிர்ச்சி சம்பவம் -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications