'பிரியாணி'-வேலூர் தேமுதிக தலைவருக்கு செருப்படி
வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பிரச்சாரம் செய்த தேமுதிகவினருக்கு இடையே பிரியாணி பொட்டலத்தை கைப்பற்றுவதில் அடிதடி ஏற்பட்டது. இதில் வேலூர் அவை தலைவருக்கு செருப்படி விழுந்துள்ளது.
திருப்பத்தூரில் வேலூர் தேமுதிக வேட்பாளர் சவுகத் ஷெரீப் தனது தொண்டர்களுடன் பிரசராத்தில் ஈடுபட்டார்.
அப்போது, வேலூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தண்டபாணியும், மாவட்ட அவைத் தலைவர் செந்தில்குமாரும் சவுகத் ஷெரீப்புக்கு ஆதரவாக தனித்தனி கோஷ்டியாகச் பிரிந்து சென்று ஓட்டு சேகரித்துள்ளனர்.
இதையடுத்து காலையில் பிரச்சாரம் முடிந்து மதிய உணவுக்காக பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.
பிரியாணி பொட்டலம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு தண்டபாணி கோஷ்டிக்கும், செந்தில் குமார் கோஷ்டிக்கும் இடையே மோதலாக வெடித்தது. இதில் தண்டபானி கோஷ்டியினர் சிலர் ஒன்று கூடி செந்தில்குமாரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இதில் செந்தில் குமாரின் சட்டை, வேஷ்டி கிழிந்தது.
மேலும் சிலர் செந்தில்குமாரை செருப்பால் அடித்தனர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் குறித்து இரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications