பெல்லார்மினுக்கு டெபாசிட் கட்டும் மின் ஊழியர்கள்
விருதுநகர்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மினுக்கு அவரது சார்பில் டெபாசிட் தொகை செலுத்த மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் எம்ஆர்வி நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமை தாங்கினார். திட்ட செயலர் எம்.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மின் வாரியத் தலைவர் கே.பி.சிங்கின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தியும், டிசிஎல், சிஎல்ஆர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் கொடுப்பது தொடர்பாகவும்,பணி நிரந்தரம் செய்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மினுக்கு டெபாசிட் தொகை செலுத்த மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.