குமரி-2வது முறை வெல்வாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

57 வயதாகும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றவர்.
1980ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் டென்னிஸ் வசம் இருந்து வந்த நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று பாஜகவின் முத்திரை இங்கு அழுத்தமாக பதிய வழி வகுத்தவர்.
இன்னும் கூட இங்கு பாஜகவின் நிழல் பெரிதாக இருக்க முக்கிய காரணம் பொன். ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள்தான்.
தற்போது திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
பாஜகவின் வாக்கு வங்கி இன்னும் இங்கு சற்று சிறப்பாகவே உள்ளதால் வெற்றி நிச்சயம் அல்லது பிற கட்சிகளின் வெற்றி எளிதாக இருக்காது என்பது பாஜகவின் நம்பிக்கை.
கன்னியாகுமரியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனும், சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. ஏ.வி. பெல்லார்மினும், தேமுதிக சார்பில் வலுவான ஆஸ்டினும் களத்தில் உள்ளனர்.
பாஜக போட்டியிடுவதன் மூலம் இத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதைக் கடந்து பொன். ராதா மீண்டும் வெல்வாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications