ஏப். 20ல் குமரியில் பிரசாரம் தொடங்கும் ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 20ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார். மே 10ம் தேதி வரை அவர் தமிழகம் முழுவதும் 18 நாட்களுக்கு தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக தரப்பில் முக்கிய பிரச்சார பீரங்கியான மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறார்.
ஸ்டாலினின் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் அவர் கன்னியாகுமரியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனுக்காக வாக்கு சேகரிக்கிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே ஸ்டாலின் இரு நாட்கள் பிரசாரம் செய்கிறார். மற்ற தொகுதிகளில் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
22ம் தேதி தூத்துக்குடியிலும், 23ம் தேதி விருதுநகரிலும், 27ம் தேதி அரக்கோணத்திலும் பிரசாரம் செய்கிறார்.
28ம் தேதி தர்மபுரியிலும், 29ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 30ம் தேதி திருவண்ணாமலையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மே 1ம் தேதி கள்ளக்குறிச்சியில் வாக்கு சேகரிக்கிறார். 2ம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் செய்கிறார்.
3ம் தேதி மதுரையில் ...
மே 3ம் தேதி மதுரையில் தனது அண்ணன் மு.க.அழகிரிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.
4ம் தேதி திருச்சி, 5ம் தேதி கரூர், 6ம் தேதி பெரம்பலூர், 7ம் தேதி சிதம்பரம், 8ம் தேதி விழுப்புரத்தில் பிரசாரம் செய்கிறார்.
9ம் தேதி தஞ்சையில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், 10ம் தேதி நாகையில் தனது பிரசாரத்தை முடிவு செய்கிறார்.