இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் அடிதடி
பாபநாசம்: பாபநாசத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீஸார் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் சிவன் கோவிலில் நேற்று சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
விழாவிற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
கோவிலுக்கு வருகிற வாகனங்கள் அனைத்தும் 1 கிமீ முன்னதாக டானாவில் நிறுத்தப்பட்டு பக்தர்கள் நடந்து சென்றனர்.
அப்பகுதியில் போக்குவரத்தை ஓழுங்குபடுத்தும் பணியில் விகேபுரம் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த மணிவண்ணன் என்ற காவலரும், கடையம் காவல்நிலையத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மற்றும் போலீசாரும், ஊர்காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அனுமதிப்பதில் மணிவண்ணனுக்கும், லெட்சுமணனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கு வந்த விகேபுரம் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications