தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு - ஜெ. நேரில் ஆஜராக கூறி சம்மன்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு வசூலித்த இலங்கைத் தமிழர் நி்வாரண நிதி ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரவில்லை என்று கூறியிருந்த ஜெயலலிதா, அதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தி விட்டதாக கூறி தமிழக அரசின் வழக்கறிஞர் ஷாஜகான், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூன் 2ம் தேதியன்று ஜெயலலிதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications