சென்செக்ஸ் 337 புள்ளிகள் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: எட்டு நாட்கள் தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் இறங்குமுகம் கண்டது. கிட்டத்தட்ட 3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை இன்று 337 புள்ளிகளை இழந்திருந்தது.
டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா மற்றும் ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் மிக அதிக இழப்பைச் சந்தித்தன.
இதனால் நேற்று 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய பங்குச் சந்தை, இன்று மீண்டும் அந்த நிலையிலிருந்து நழுவி 10947 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்போஸிஸ், ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து இன்றும் நஷ்டத்தைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 10947 புள்ளிகளாகவும், நிப்டி 3369 புள்ளிகளாகவும் இருந்தன.












Click it and Unblock the Notifications