புயல் அபாயம் நீங்கியது.. வெப்பம் அதிகரிப்பு
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆந்திர கரையோரம் நகர்ந்ததால் தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தென் கிழக்கே 750 கிமீ தொலைவில் நேற்று முன் தினம் உருவான இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வட கிழக்கே நகர்ந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இந் நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
சென்னைக்கு தெற்கே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
இதனால் கடல் காற்று குறைந்து தரைக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. இது ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டதால் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும். கடந்த 2 நாட்களிலேயே வெப்பநிலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
இதனால் தென் தமிழகத்திலோ கடலோர மாவட்டங்களிலா மழை பெய்ய வாய்பி்லலை என்றார்.












Click it and Unblock the Notifications