தா.பாண்டியனை சாடி கருணாநிதி கவிதை
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை சாடி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை இதோ...
நமது அரசியல் பண்பாடு பற்றி
நற்கண்ணப் பெரியீர் உபதேசம் செய்கின்றீர்-
நன்று, நன்று; நானும்
நன்றேயென அதனை வழி மொழிகின்றேன்!
அரசியலில் கடைப்பிடிக்கும் பண்பாடு
அனைவர்க்கும் வேண்டும்தானே?
அணு ஒப்பந்த விவகாரத்தில்
அகில இந்திய காங்கிரசுடன் மோதிக்கொண்டீர்-
அத்துடன் நிறுத்தாமல்
அத்துமீறி எம்மிடமும் தகராறு ஏன் தொடருகின்றீர்?
ஏடுகளை எடுத்துப்புரட்டிப்பார்த்தால்-
கேடு பல எழுதி நாள்தோறும் எமைத்திட்டியது நீரேயன்று;
தேதி வாரியாகச் செய்திகளைக்காட்டி மெய்ப்பிக்கத் தயார்!
வாதிப்பதற்கு வழியுண்டா உமக்கு?
தா.கி.பற்றி தாறுமாறாக எழுதியதற்கு
தடிகொண்டு அடிப்பதுபோல் பதில் தந்தால்
தண்டாயுதத்துக்கு வக்காலத்து வாங்கி
தகுதியற்றோர்க்கெல்லாம் தங்கப்பதக்கம் தருகின்றீரே?
தகுமா? முறையா?
முதலில் சொன்னது யாராம்?
முகத்தில் திருப்பி அடித்தால்
முகாரி ராகம் பாடலாமா?
தா.கி.கதையை இப்போது சொல்லி
தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!
தமிழர் பண்பாட்டைத் தாமதமின்றி
தவறாமல் அவருக்கும் சொல்லலாமே?












Click it and Unblock the Notifications