இலங்கைக்கு ஐ.நா-இந்தியா ஆதரவு: புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நடத்தி வரும் போருக்கு ஐ.நா, இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயம் மறைமுக ஆதரவு தந்து வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்களை வெளியேற விடாமல் நாங்கள் தடுப்பதாகவும், இப்போதைக்கு போரை நிறுத்த முடியாது என ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் தலைவர் ஜான் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார். இதையே தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளும் கூறியுள்ளன.

இதன்மூலம் பாதுகாப்பு வளையம் என்று சொல்லப்படக் கூடிய இடத்திலேயே ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை ஐ.நாவும், இந்தியாவும் உலக நாடுகளும் தடுக்க முயலவில்லை.

புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது அடக்குமுறையாக எதிராக கிளம்பிய போராட்டம். தமிழ் இனத்துக்கு உரிய உரிமைகள் கிடைத்தால் ஆயுதங்களை கைவிட புலிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனை 'மீ்ட்க' ஐ.நா. முயற்சியாம்..

இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அந்த அமைப்பின் பிற தலைவர்களையும் ஐ.நா. சபையின் முன்பு சரணடைய வைத்து அவர்களை பத்திரமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றும் முயற்சியில் ஐ.நா. இறங்கியிருக்கிறது. விஜய் நம்பியாரின் வருகைக்கு அதுவே காரணம் என இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி கட்சித் தலைவர் விமல் வீர வன்ச கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

விடுதலைப் புலிகளின் தலைவர்களை ஐ.நா. சபையின் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதுவர் ராபர்ட் பிளேக் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே ஐ.நா.வின் உயர் அதிகாரியான விஜய் நம்பியார் கொழும்பு வந்திருக்கின்றார்.

இலங்கை படையினரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சரணடையச் செய்வதைத் தவித்து ஐ.நா.விடம் இவர்களைச் சரணடையச் செய்து வெளிநாடுகளுக்கு அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதே இந்தத் திட்டமாகும்.

ஐ.நா., அமெரிக்கா உட்பட பல நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்த ஆதரவு - அதன் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தால் வெளியே தெரிய வந்துவிடும் என்பதால் அதனை மறைப்பதற்காகவும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சதித்திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும். அதிபரும், அரசாங்கமும் இதுவரை செயற்பட்டதைப் போல இனியும் அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இந்த விஷயத்தில் செயற்படுவது அவசியம்.

மேலும், நீண்டகால போர் நிறுத்தத்துக்காக குரல் கொடுக்கும் நாடுகளின் குரலுக்கும் அரசு பணிந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் விமல் வீர வன்ச.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+