For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர்: களத்தில் குதித்த காங். போட்டி வேட்பாளர்!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்: வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 'முதல் போட்டி வேட்பாளர்' என்ற 'பெருமை' ராயர் என்பவருக்குக் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடலூரில் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அழகிரியை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெய்சூர்யா கல்வி அறக்கட்டளையின் தலைவரான கே.ராயல் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 மனுக்களையும், சுயேட்சை வேட்பாளராக ஒரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும், வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு முன்பு கட்சி எனக்கு அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.

கடலூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக கே.எஸ்.அழகிரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடலூர் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X