காங்.குக்கு எதிரான பெரியார் தி.க. கூட்டத்திற்கு போலீஸ் தடை
ஈரோடு: ஈரோட்டில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடைபெற இருந்த பெரியார் திராவிடர் கழக கூட்டத்திற்கு போலீசார் திடீர் தடை விதித்தனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரியும், இலங்கை தமிழர்கள் விவகராத்தில் இந்தியா சரியான நிலைப்பாட்டை எடுக்க கோரியும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோற்கடிப்பது என்றும் பெரியார் திராவிடர் கழகத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடிக்க கோரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளாவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட போலீசார் அனுமதி மறுத்தோடு தடை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications