இந்திய ஐடி துறை 2010ல் மீளும் - இன்போஸிஸ்
சென்னை: இந்திய ஐடி துறை விரைவில் முன்னேற்றப்பாதைக்குத் திரும்பும் என இன்போஸிஸ் சிஇஓ கிருஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இப்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவின் ஐடி துறை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிவிடும்.
இந்திய பொருளாதார மந்த காலத்தில் சில ஊழியர்கள் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை வேலைப் பறிப்பு என்று கூறுவதைவிட, நிறுவனத்தின் நன்மைக்காக செய்யப்பட்ட சீரமைப்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும்போது, வேலைவாய்ப்புகள் தாராளமயமாகும்.
இன்போஸிஸ் ஏற்கெனவே 18000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இப்போது சீனாவில் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. இதனால் அவுட்சோர்ஸிங் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்போஸிஸ் இங்கு 2 மையங்களைத் திறந்துள்ளது, என்றார்.