ராணுவத்துடன் கடும் சண்டை - 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் சண்டையில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தின் ரெட் ஹார்ன்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்கும், அஸ்ஸாம் முஸ்லீம் ஐக்கிய விடுதலைப் புலிகள் (முல்டா), போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே அகபஸ்தி என்ற இடத்தில் கடும் சண்டை மூண்டது.
இரு தீவிரவாத அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஊடுறுவல் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தடட் நான்கு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், முல்டாவைச் சேர்ந்த 2 பேரும், என்டிஎப்பியைச் சேர்ந்த 3 பேரும் கொல்லப்பட்னர்.
அவர்களிடமிருந்து 9 எம்எம் பிஸ்டல் நான்கு, ஒரு சீன கையெறி குண்டு, ஐந்து கிலோ வெடிபொருட்கள், 10 டெட்டனேட்டர்கள், 107 சுற்று ஏ.கே. ரக துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications