இது கருணாநிதியின் தேர்தல் ஸ்டண்ட்: டக்ளஸ்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: பிரபாகரன் எனது நண்பர், அவர் தீவிரவாதி அல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது, தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அவர் அடித்திருக்கும் ஸ்டண்ட் என்று விடுதலைப் புலிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பவரும், இலங்கை சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் கருணாநிதி ஒரு சாணக்கியர். தேர்தல் லாபத்திற்காக பிரபாகரனை எனது நண்பர் என்று கூறி ஆதாயம் தேட முனைகிறார். இது தேர்தல் காலத்து ஸ்டண்ட்.
எந்த நேரத்தில், எதை, எப்படி பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் கருணாநிதி.
இந்தியாவில் இது தேர்தல் காலம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே ஆதாயத்தைக் கருதியே இவ்வாறு பேசியுள்ளார் கருணாநிதி என்றார் டக்ளஸ் தேவானந்தா.












Click it and Unblock the Notifications